போயஸ் கார்டனுக்கு போன தனுஷை அனுமதிக்காத லதா ?
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். தற்போது அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும் முயற்சி செய்தார்கள். ஆனால் தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை இந்த ரஜினி தரப்பில் சமரச பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டதாககூறப்படுகிறது.
ஆகவே சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்கள் எல்லாம் தனுஷை வைத்து யாரும் படம் பண்ண வேண்டாம் என்றுலதா ரஜினிகாந்த் தரப்பில் கூறப்பட்டதாக இதனால் தனுஷுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது.
இந்த நிலையில் மாமியாரிடமே சமரசம் பேசி பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்று போயஸ் கார்டனுக்கு சென்றாராம் தனுஷ். அவரை காவலாளி உள்ளே விடவில்லையாம். காவலாளி போய் சொன்னதற்கு யாரையும் பார்க்க முடியாது என்று கூறிவிட்டாராம் லதா, இதையடுத்து லதாவுக்கு போன் செய்தாராம் தனுஷ்.
ஆனால் அவர் போனை எடுத்து பேசவில்லையாம்.
நான் என்ன சார் செய்வேன், அம்மா உங்களை உள்ளே விடக் கூடாதுனு சொல்லிட்டாங்க என்று காவலாளி கூறினாராம். இதையடுத்து வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றார் தனுஷ் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.