வாடகை பாக்கி தரல,காலியும் பண்ணல - 6 குழந்தைகளுடன் வீட்டிற்கு தீ வைத்த முதியவர்!
வீட்டை காலிசெய்ய மறுத்ததால் 6 குழந்தைகளுடன் முதியவர் ஒருவர் வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.
வாடகை பாக்கி
அமெரிக்கா, புரூக்ளின் பகுதியில் ஒரு தம்பதி இரண்டாவது மாடியிலிருந்த வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 6 குழந்தைகள். இந்நிலையில், திடீரென வீடு தீபற்றியது. உடனே தம்பதியினர் குழந்தைகளுடன் தப்பித்தனர்.
தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில், வீட்டின் பொருட்கள் சேதமடைந்தது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள்,
வீட்டிற்கு தீ வைப்பு
"இந்த வீட்டிலிருந்த சிசிடிவி கேமராவை சோதித்ததில் ஒரு முதியவர் வந்து வீட்டுக்குத் தீ வைத்தது பதிவாகியிருக்கிறது. அதை ஆய்வு செய்ததில் வீட்டு உரிமையாளர் ரபிகுல் இஸ்லாம்(66) என்பது உறுதியானது. அதன் அடிப்படையில் கைது செய்தோம்.
ஏன் தீ வைத்தார் என விசாரித்ததில், அந்த வீட்டில் குடியிருந்த தம்பதி கடந்த 6 மாதமாக வாடகைத் தரவில்லை. மேலும், வீட்டை காலி செய்யக் கூறியும் மறுத்து எதிர்வாதம் செய்திருக்கிறார்கள்.
இதனால், விரக்தியடைந்த முதியவர் வீட்டுக்குத் தீ வைத்திருக்கிறார். இது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு முன்னாலேயே இந்த வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். குற்றம்சாட்டப்பட்டவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளனர்.