நிலவில் இரண்டாவது முறையாக லேண்டரை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ..!!

India ISRO Chandrayaan-3
By Karthick Sep 04, 2023 05:59 AM GMT
Report

நிலவின் தென் துருவத்தில் மீண்டும் ஒரு முறை சந்திரயான் 3 விக்ரம் லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் ஒரு முறை தரையிறங்கி சாதனை படைத்துள்ளனர்.

சந்திரயான் 3   

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் (ISRO) கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தை இயக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

lander-successfully-deployed-for-second-time

இதைத் தொடர்ந்து நேற்று சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கும் பணிகள் துவங்கப்பட்டு பல சோதனைகளையும், சவால்களையும் எதிர்கொண்டு வெற்றிகரமாக 6:04 மணிக்கு விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ.

மீண்டும் ஒரு முறை தரையிறக்கம்  

தொடர்ந்து தனது ஆய்வு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ள லேண்டரை இஸ்ரோ விஞ்ஞானிகள் மீண்டும் ஒரு முறை தரையிறக்கியுள்ளது. அதாவது கட்டுப்பாடு அறையில் இருந்து அளிக்கப்பட்ட உத்தரவின் பேரில் லேண்டர் சாதனம் 40 சென்டிமீட்டர் மேலெழும்பி மீண்டும் கிட்டத்தட்ட 30, 40 சென்டிமீட்டர் தள்ளி நிலவின் தென் துருவத்தில் மீண்டும் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், லேண்டரின் அனைத்து கருவிகளும் சரியான உள்ளன என குறிப்பிட்டு, இவ்வாறு மீண்டும் ஒரு முறை லேண்டரை மேலெழுப்புவது வருங்காலங்களில் மனிதர்களை வெற்றிகரமாக நிலவிற்கு சென்று வருவதற்காக ஒரு முன்னெடுப்பு என பதிவிட்டுள்ளது.