சினிமாவிலிருந்து விலகுகிறாரா நயன்தாரா...? - வெளியான தகவல்... - ஷாக்கான ரசிகர்கள்...!
நடிகை நயன்தாரா சினிமாவிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து, திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார்.
இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகை நயன்தாராவும், கணவர் விக்னேஷ் சிவனும் தன் இரு மகன்களுடன் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதனையடுத்து, நடிகை நயன்தாரா தன் குடும்பத்துடன் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
சினிமாவிலிருந்து விலகுகிறார் நயன்தாரா...?
இந்நிலையில், நடிகை நயன்தாரா சினிமாவிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தன் இரட்டை குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக சினிமாவிலிருந்து விலகும் முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நயன்தாரா, பாலிவுட்டில் ஷாருக்கானின் 'ஜவான்', பெயரிடப்படாத நயன்தாராவின் 75வது படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார். எனவே, கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு, இனி அவர் தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
நயன்தாரா சினிமாவிலிருந்து விலகும் தகவல் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தற்போது நயன்தாரா தரப்பில் இது குறித்து எந்தவித அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.