திருமணத்துக்கு வந்த போட்டோகிராபருடன் மாப்பிள்ளை தகாத உறவு - மணப்பெண் அதிரடி முடிவு!
மணமகனுடன் போட்டோகிராபர் தகாத உறவில் இருந்ததால் மணப்பெண் அதிரடி முடிவெடுத்துள்ளார்.
தகாத உறவு
Wedding Photography என்கிற ரெடிட் அக்கவுண்ட்டில் Wedding Dude என்கிற பயனர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'ஒரு பெண்ணின் திருமணத்திற்காக தான் போட்டோ எடுக்க புக்கிங் செய்யப்பட்டதாகவும்,
அப்போது தனக்குக்கீழ் வேலை செய்து வந்த போட்டோகிராபர் இல்லாததால், வேறு ஒரு பெண் போட்டோகிராபரை வேலைக்கு சேர்த்துள்ளார்.
மணப்பெண் முடிவு
ஆனால், அப்பெண் போட்டோகிராபர் மணமகனுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததால் அந்த மணப்பெண் முழு போட்டோகிராபிக்கான பணத்தையும் திருப்பி செலுத்துமாறு மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும் இதை நிரூபிக்கும் விதமாக தொலைபேசியிலிருந்து சில புகைப்படங்களையும் பகிர்ந்தார் என்று கூறியுள்ளார். மேலும், இந்த விஷயத்தில் என்னால் என்ன செய்ய முடியும்? இந்த பெண்மணிக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
ஆனால் நான் செய்த போட்டோகிராபி வேலைக்குத் திரும்பக் கொடுக்க வேண்டிய பணத்தின் தொகை அதிகம்." என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, அவர் ஒப்பந்தந்தில் பணியமர்த்திய பெண் போட்டோகிராபரிடம் இது குறித்து கேட்டிருந்தாகவும்,
ஆனால் அதனை அவர் மறுத்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். பின்னர், புகைப்பட ஆதாரங்களை காண்பித்த பிறகு, தானும் அந்த மணமகனும் ஓப்பன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக ஒப்புக் கொண்டார் என்று பதிவிட்டுள்ளார்.