குஷ்புவின் கணவர் மருத்துவமனையில் திடீர் அனுமதி: சோகத்தில் குடும்பத்தினர்
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என வைரஸ் யாரையும் விட்டுவைக்கவில்லை. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநரும், நடிகருமான சுந்தர்சி-க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது இது குறித்து அவர் மனைவி குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், தனது கணவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்பதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தாங்களும் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பு தனக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அதில் நெகட்டிவ் என வந்த நிலையில், தற்போது மீண்டும் பரிசோதனை எடுக்க இருப்பதாக குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Hi, my husband #SundarC has tested #Covid19 positive today eve. He is doing well but admitted in hospital for precautionary measures. Request anyone who has been in contact with him to please isolate yourself and get tested immediately. Pls prayer for his speedy recovery. ???
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 10, 2021