உலகிலேயே மிகவும் வயதானவர்; கின்னஸ் புத்தகத்தில் கேரள மூதாட்டி - எத்தனை வயது தெரியுமா?
உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் கேரளாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர்.
உலகிலேயே மிகவும் வயதானவர்
உலகில் மிகவும் வயதான நபர் பட்டியலில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 116 வயதான மரியா பிரான்யாஸ் என்ற மூதாட்டி இடம் பெற்றிருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியை சேர்ந்த குஞ்சீரும்மா என்ற மூதாட்டி 'உலகிலேயே மிகவும் வயதானவர் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
குஞ்சீரும்மாவின் ஆதார் அட்டையின்படி, கடந்த ஜூன் மாதம் அவருக்கு 120 வயதாகிறது. குஞ்சீரும்மா தனது 17 வயதிலேயே கலம்பன் செய்தலி என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 13 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 7 பேர் இறந்து விட்டனர். இதுவரை 5 தலைமுறைகளை கண்டுள்ளார் குஞ்சீரும்மா.
குஞ்சீரும்மா
தற்போதுவரை குஞ்சீரும்மாவுக்கு கண்பார்வை திறன் மற்றும் கேட்கும் திறன் நன்றாக இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற எந்த நோய்களாலும் பாதிக்கப்படாமல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார். ஆனால் குஞ்சீரும்மாவுக்கு இப்போது ஒரு சக்கர நாற்காலி தேவை, சில ஆண்டுகளுக்கு முன்பு விழுந்த பிறகு அதைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
குஞ்சீரும்மா தனது இளமைப் பருவத்தை நினைவுகூர்ந்து, தான் பள்ளிக்குச் செல்லவில்லை, மதரஸா (இஸ்லாமிய கல்வி) மட்டுமே சென்றதாக கூறினார். தனது குழந்தைப் பருவத்தில் கண்ட பிரிட்டிஷ் எதிர்ப்புக் கலவரங்களையும் தெளிவாக நினைவு கூர்ந்தார்.
வயலில் மாடு மேய்க்கும்போது ஈட்டி ஏந்திய புரட்சியாளர்களிடமிருந்தும் துப்பாக்கிச் சூடுகளிலிருந்தும் மறைந்திருந்ததை குஞ்சீரும்மா நினைவு கூர்ந்தார்.