உதயநிதியின் சர்ச்சை...மன்னிப்பு கேட்கவேண்டும்...ஐகோர்ட் அதிரடி நிபந்தனை!!

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu ADMK DMK
By Karthick Oct 05, 2023 01:07 PM GMT
Report

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியது குறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி அதிமுக முன்னாள் எம்எல்ஏ குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

குமரகுரு சர்ச்சை

பேச்சு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி தொகுதியின் அதிமுக முன்னாள் எம்எல்ஏ'வான குமரகுரு, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக கள்ளக்குறிச்சி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் போலீசில் புகார் அளித்தார்.

kumaraburu-needs-to-ask-sorry-in-udhay-controvesy

இந்த புகாரின் அடிப்படையில், குமரகுரு மீது கள்ளக்குறிச்சி காவல் துறையினர் ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதை ஏற்க முடியாது என்று கூறி, காவல்துறையிடம் குமரகுரு முறையான அனுமதி பெற்று மற்றொரு பொதுக்கூட்டத்தை நடத்தி, அதில் தனது பேச்சு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். மேலும் வழக்கின் விசாரணையை வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அவர் உத்தரவிட்டார்.