சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவக மேலாளர் சரமாரியாக தாக்கு - அதிர்ச்சி காட்சிகள்

krishnagiri beaten hotel manager 2 arrest
By Anupriyamkumaresan Nov 01, 2021 07:45 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்து மேலாளரைத் தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூளகிரியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட ஓசூரைச் சேர்ந்த நண்பர்கள் 4 பேர், அதற்கான பணத்தை செலுத்தாமல் செல்ல முயன்றுள்ளனர்.

இதுபற்றி கேட்ட உணவக மேலாளர் ஹரிஷை அவர்கள் தாக்கியதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. கணினிகள், அலைபேசிகள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளனர்.

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட உணவக மேலாளர் சரமாரியாக தாக்கு - அதிர்ச்சி காட்சிகள் | Krishnagiri Hotel Manager Beaten 2 Arrest

இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகின. காயமுற்ற ஹரிஷ் அளித்த புகாரின்பேரில், தகராறில் ஈடுபட்ட நால்வர் மீதும் வழக்குப்பதிவு செய்த சூளகிரி காவல் துறையினர், கணேஷ், அர்ஜுன் ஆகிய இருவரை கைது செய்தனர்.