8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர், தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைப்பு

relative coimbatore sexual harassment kovilmedu 8 yr old
By Swetha Subash Jan 19, 2022 12:15 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

கோவை அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உறவினரை, புரட்டி எடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சபரி. இவரது உறவினர் கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வசித்து வருகின்றனர்.

கோவில்மேடு பகுதியில் வசித்து வரும் உறவினருக்கு 8 வயதில் சிறுமி உள்ளார். இந்த சிறுமியை பார்ப்பதற்காகவே அடிக்கடி கோவையில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வர ஆரம்பித்துள்ளார் சபரி.

அதேபோல் கடந்த 9-ம் தேதி உறவினர் வீட்டிற்கு வந்த சபரி, அங்கிருந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்தும், வரமறுத்ததால் தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார் சபரி, அதுமட்டுமல்லாது சிறுமியை தனக்கு திருமணம் செய்து வைய்யுங்கள் என சிறுமியின் உறவினர்களிடம் சபரி கேட்டுள்ளார்.

இதனால் சிறுமியின் உறவினருக்கும், சபரிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சபரி தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததையும் சிறுமி பெற்றோரிடம் கூற, அதை கேட்டு ஆத்திரமடைந்த சபரியின் உறவினர்கள், அவரை சுற்று வளைத்து தர்ம அடி கொடுத்து துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.