55 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வெளி உலக சந்திப்பு - அறியப்படாத மர்மம்!
55,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகை சந்தித்த பழங்குடியினர் குறித்து பார்ப்போம்.
கொரோவாய்
இந்தோனேசியாவின் பப்புவா அடர்ந்த மழைக்காடுகளில் கொரோவாய் பழங்குடியினர் வசிக்கின்றனர். அங்கு சென்றடைவது மிகவும் கடினம். 1970-கள் வரை, இப்படியொரு பழங்குடி மக்கள் இருப்பதை உலகம் அறிந்திருக்கவில்லை.
55,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெளி உலகை சந்தித்த பழங்குடியினர் என அறியப்படுகிறார்கள். இவர்கள் மீன்களை வேட்டையாடுவதோடு, காட்டில் இருந்து சவ்வரிசி போன்ற உணவுப் பொருட்களைச் சேகரிக்கிறார்கள்.
அறியப்படாத மர்மம்
இவர்களின் மக்கள்தொகை 4,000 முதல் 4,400 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 'மர வீடுகள்' கட்டுவதற்குப் பெயர் பெற்றவர்கள். தங்கள் முழு கிராமத்தையும் மரங்களின் மீது அமைத்துள்ளனர்.
அவர்களின் வீடுகள் தரையில் இருந்து 10 முதல் 50 மீட்டர் உயரத்தில், வலுவான மரத் தண்டுகளால் தாங்கப்பட்டு, இலைகளால் மூடப்பட்டிருக்கும்.
பாதுகாப்பிற்காக இவ்வாறு செய்கின்றனர். இதில் சில குழுக்கள் தற்போது சுற்றுலாப் பயணிகள் மற்றும் மிஷனரிகளுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளனர். "First Contact" மற்றும் "Human Planet" போன்ற ஆவணப் படங்களில் கொரோவாய்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் Manithan

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
