கொலைக்கு பின் வன்கொடுமை - பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனையில் பகீர் உண்மைகள்!

Sexual harassment West Bengal Crime
By Swetha Aug 13, 2024 05:42 AM GMT
Report

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு 250 எம்பிபிஎஸ் இடங்களும், 175 முதுநிலை இடங்களும் உள்ளன.இதில், முதுநிலை மருத்துவப் படிப்பு பயிலும் பெண் மருத்துவர் (28) பணியில் இருந்துள்ளார்.

கொலைக்கு பின் வன்கொடுமை - பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனையில் பகீர் உண்மைகள்! | Kolkata Trainee Doctor Death Case Autopsy Report

அதிகாலை 3 மணி அளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார். மறுநாள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) கைது செய்தனர். பெண் மருத்துவர் கருத்தரங்கு கூடத்தில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

நாட்டை உலுக்கிய மாணவி கொலை வழக்கு; இயற்கைக்கு மாறான உறவு - மருத்துவர்கள் ஸ்டிரைக்!

நாட்டை உலுக்கிய மாணவி கொலை வழக்கு; இயற்கைக்கு மாறான உறவு - மருத்துவர்கள் ஸ்டிரைக்!

கொலைக்கு பின்..

இந்த நிலையில், அப்பெண்ணின் உடலில் கண்கள், வாய், அந்தரங்க உறுப்புகளில் ரத்தம் கொட்டிய நிலையில், இடது கால், கழுத்து, வலது கை, உதடுகளில் காயங்கள் இருந்தன. உடற்கூறாய்வு அறிக்கையின்படி, அந்த இளம் பெண்மருத்துவர், கொலை செய்யப்பட்ட பின்பே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காவல்துறையினர்

கொலைக்கு பின் வன்கொடுமை - பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனையில் பகீர் உண்மைகள்! | Kolkata Trainee Doctor Death Case Autopsy Report

தெரிவிக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையில், கொலை குற்றவாளி, மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்லும் காவல் தன்னார்வலர் என்பது தெரியவந்தது. மேலும், கொலை செய்த பின் எந்த பதற்றமும் இல்லாமல், தப்பியோடாமல், ரத்தக் கறைகள் இருந்த உடைகளை துவைத்த அந்த நபர்,

பின்னர் அருகில் உள்ள காவல்பூத்திற்குச் சென்று நன்றாக உறங்கியிருக்கிறார்.அந்த நபரின் ஷுவில் அகலாமல் இருந்த ரத்தக் கறைகளைக் கொண்டு அவர்தான் கொலை செய்தவர் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். சம்பவ நாளில் மருத்துவமனையில் பணியில் இருந்தவர்களிடமும் காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.

சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்துவருகிறார்கள். மேற்குவங்கத்தை அதிர வைத்துள்ள இந்த கொலைச் சம்பவத்தை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.