இந்திய அணியின் எதிர்காலம் அவர்தான் : உண்மையை போட்டுடைத்த விராட்கோலி

Virat Kohli Rishabh pant
By Petchi Avudaiappan Jun 25, 2021 11:54 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

ரிஷப் பண்டை கடைசி வரை நிதானமாக விளையாட சொல்ல தங்களால் முடியாது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி அதிக ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் ரிஷப் பண்ட் மட்டும் சற்று அதிரடியாக விளையாடி 41 ரன்கள் குவித்தார்.

அவர் இன்னும் சற்று நிதானமாக விளையாடி இருக்கலாம் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். 

இந்திய அணியின் எதிர்காலம் அவர்தான் : உண்மையை போட்டுடைத்த விராட்கோலி | Kohli Talks About Rishab Pant

இதற்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரிஷப் பண்ட் அடிப்படையில் சற்று அதிரடியாக விளையாடும் கேம் ஸ்டைலை கொண்டவர் என்றும்,அவருடைய நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் குறைத்து மதிப்பிட மாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் நிச்சயமாக இந்திய அணிக்கு இன்னும் பல ஆண்டுகள் ரிஷப் பண்ட் விளையாடுவார். இனிவரும் காலங்களில் அவர் தன்னுடைய இயல்பான அதிரடி ஆட்டத்தை காண்பிப்பது அவருக்கு சரியாக இருக்கும் என்று கோலி தெரிவித்துள்ளார்