பாவம் விராட் கோலி... பிசிசிஐ ரொம்ப பண்ணிட்டாங்க : வெளுத்தெடுத்த முன்னாள் வீரர்
பிசிசிஐயின் செயல் விராட் கோலிக்கு மனதளவில் மிகப் பெரும் காயத்தை ஏற்படுத்திருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒருநாள் தொடர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களாகவே இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் பின்னால் உள்ள உண்மையான காரணம் தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர். மேலும் விராட் கோலி,பிசிசிஐ தலைவர் கங்குலி ஆகியோர் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விளக்கமளிப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் தனது கருத்தை கூறியுள்ளார்.
அப்போது விராட் கோலி ஒருநாள் தொடர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கவலைப்படவில்லை. ஆனால் அவரிடம் அந்த விஷயத்தை சொன்னவிதம் அவரை மனதளவில் மிகப் பெரும் காயத்தை ஏற்படுத்திருக்கும் என்று நினைக்கிறேன்.
மேலும் நானும் தேர்வாளராக இருந்திருக்கிறேன்,தேர்வாளர்கள் வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால் தேர்வு செய்த அந்த அறிக்கையை பிசிசிஐயின் தலைவரிடம் காட்டுவார்கள் அது சரியாக இருக்கும் பட்சத்தில் பிசிசிஐ தலைவர் கையெழுத்திட்டு அதை வெளியிடுவார். அதேபோன்றுதான் கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென்றாலும் இதே நடைமுறையை பயன்படுத்துவார்கள்