Tuesday, Jul 15, 2025

திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி மதுபாட்டில்களை திருடி ஓடிய நபர் - அதிர்ச்சி வீடியோ வைரல்..!

Tamil nadu Viral Video
By Nandhini 3 years ago
Report

திருச்சியில் மதுபானக் கடைக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவர், மதுபான ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி மதுபாட்டில்களை திருடி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

மதுபாட்டில்களை திருடி ஓடிய நபர்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், திருச்சியில் மதுபானக் கடைக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் மதுபானக் கடைக்குள் புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி மதுபாட்டில்களை கொள்ளையடித்து ஓடியுள்ளார். 

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் மதுபாட்டில்களை கொள்ளையடித்து ஓடிய நபரின் சிசிடிவி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

knife-trichy-theft-of-liquor-bottles-viral-video