இந்திய அணியில் விராட் கோலி இருப்பது எங்களுக்கு பெரிய பலம் - கே.எல்.ராகுல்

Virat Kohli KL Rahul Indian Cricket Team
By Nandhini Sep 09, 2022 04:48 PM GMT
Report

இந்திய அணியில் விராட் கோலி இருப்பது எங்களுக்கு பெரிய பலம் என்று கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.  

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20

துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இரு பிரிவுகளாக 6 அணிகள்

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. இதில் 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது.

ஹாங்காங்கை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங் - இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின. இப்போட்டியில், 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசிய கோப்பை டி20 தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் - இந்தியா மோதிக் கொண்டன. இப்போட்டியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி. இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.

kl-rahul-virat-kohli

கிரிக்கெட் வீரர் ராகுல் பேட்டி

நேற்று நடைபெற்ற இப்போட்டியில், முன்னாள் கேப்டன் விராட் கோலி 2019ம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச போட்டியில் சதம் அடித்து முத்திரை பதித்துள்ளார். இந்த வெற்றி குறித்து கிரிக்கெட் வீரர் ராகுல் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது -

நான் பெரிய காயம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு திரும்பியிருக்கிறேன். இத்தொடரில் நாங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். விராட்கோலி ரன்களை குவிப்பது இந்திய அணிக்கு பெரிய போனஸ். இதன் மூலம் அணிக்கு மேலும் பலம் கிடைக்கும்.

அவர் பேட்டிங் செய்யும் விதம் எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது. 2 அல்லது 3 இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்து விட்டால் நம்பிக்கை எங்களுக்கு வந்துவிடும்.

விராட் கோலி 3-வது வரிசையில் சிறப்பாக ஆடுவதால் அதில் தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவார். 3-வது பேட்டிங் வரிசையில் அவரால் அதிக ரன்களை குவிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.