ஒரு கேப்டனே இப்படி நாடகம் ஆடலாமா? - கே.எல்.ராகுலின் திட்டம் தோல்வி

IPL2022 TATAIPL GTvLSG LSGvGT
By Petchi Avudaiappan Mar 28, 2022 03:41 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் செய்த சம்பவம் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் 2 நாட்களில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் புதிதாக இந்தாண்டு அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகிறது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரராக கே.எல்.ராகுலும், குயிண்டன் டி-காக்கும் களமிறங்கினர். 

ஆட்டத்தின் முதல் ஓவரை முகமது ஷமி வீச முதல் பந்தை கேப்டன் கே.எல்.ராகுல் எதிர்கொண்டார். ஆனால்  4வது ஸ்டம்ப் லைனுக்கு வந்த இந்த பந்தை ராகுல் தொட அது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது.

ஒன்றுமே நடக்காதது போல் கேஎல் ராகுல் நிற்க  நடுவரும் இதற்கு அவுட் தரவில்லை. இதனால் இது அவுட்டா இல்லையா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விக்கெட் கீப்பர் மேத்தீவ் வெட் டிஆர்எஸ் கேட்க கோரினார். இதனை ஏற்ற ஹர்திக் பாண்டியா உடனடியாக டிஆர்எஸ் கேட்டார். அதில் கே.எல்.ராகுல் அணிந்திருந்த பேடில் பேட் பட்டது போல் முதலில் தெரிந்தது.

ஆனால் ஸ்நிகோ மீட்டரை வைத்து பார்த்த போது பந்து பேட்டில் பட்டது தெளிவாக தெரிந்தது. இதனால் புதிய அணியின் கேப்டன் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி லக்னோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.