லக்னோ ஜெயன்ட்ஸ் அணி; விலகும் கே.எல். ராகுல் ? வெளியான ஷாக் தகவல்!
லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து கே.எல். ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லக்னோ அணி
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடரில் ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. அதில் 0 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய லக்னோ அணி நிர்ணயித்த 166 ரன்கள் இலக்கை அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது.
கே.எல். ராகுல்
இந்த போட்டி நிறைவடைந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சய் கோயங்கா, மைதானத்திலேயே அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலிடம் ஆக்ரோஷமாக விவாதித்த வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவியது.
இதனால் விரக்தி அடைந்த ராகுல் லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக இந்த சீசனில் எஞ்சியுள்ள 2 போட்டிக்கு நிகோலஸ் பூரன் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.