Thursday, May 22, 2025

கே.எல் ராகுலுக்கு இன்னும் நிறைய கேப்டன் வாய்ப்பு கொடுங்க..மனம் திறந்த கவுதம் கம்பீர்

KL Rahul Gautam Gambhir Captain Post
By Thahir 3 years ago
Report

கேஎல் ராகுலுக்கு இன்னும் நிறைய கேப்டன் வாய்ப்புகள் கொடுக்க வேண்டுமென பேசியுள்ளார் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை.

தற்காலிக கேப்டன் ராகுல் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த விவகாரம் தற்போது முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

240 ரன்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட பிறகு, அதனை உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து கேஎல் ராகுல் கட்டுப்படுத்தவில்லை.

வெற்றியை எளிதாக விட்டுக் கொடுத்துவிட்டார். மேலும் 1992 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது இல்லை.

அத்தகைய சாதனையையும் கேஎல் ராகுல் விட்டுக் கொடுத்துவிட்டார். இதனால் அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இதற்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை மற்றும் சரியான இடத்தில் பீல்டிங் நிற்க வைக்கவில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதற்கிடையில் கேஎல் ராகுலுக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர் நிறைய கற்றுக் கொள்வார் என கருத்து தெரிவித்து இருக்கிறார் கௌதம் கம்பீர்.

அவர் கூறுகையில், “நிச்சயம் விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக மிஸ் செய்திருப்போம். ஏனெனில் ஜோ ரூட், வில்லியம்சன் போன்ற உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விராட் கோலி இருக்கிறார்.

அவர் என்ன பார்மில் இருக்கிறார் என்பது கவலை இல்லை. நிச்சயம் அணியில் இல்லை என்றால் பெருத்த பின்னடைவாக இருக்கும்.

அதே போல் விராட் கோலியை ஒரு கேப்டனாக நிச்சயம் இந்திய வீரர்கள் மிஸ் செய்திருப்பார்கள் என நிறைய அனுபவமும் ஆக்கத்தையும் கொண்டிருக்கிறார்.

அவர் அணியில் இருந்தால் எந்த நிலையிலும் இந்திய அணி சோர்வடையாது. கேஎல் ராகுல் அனுபவம் இல்லாமல் சில தவறுகள் செய்திருக்கிறார். அதை நாம் பொருட்படுத்த கூடாது.

இன்னும் நிறைய வாய்ப்புகள் கொடுத்து நல்ல அனுபவத்தை பெறச் செய்ய வேண்டும். லிமிடெட் ஓவர் போட்டிகளில் பீல்டிங் நிற்க வைப்பது பெரிய சவாலாக இருக்காது.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அதுதான் மிகவும் முக்கியம். அப்போதுதான் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். இல்லையெனில், ஐந்து நாட்களும் ஒரே அணி பேட்டிங் செய்யும் அளவிற்கு சென்றுவிடும்.” என அறிவுறுத்தினார்.