“அவங்க தான் சொதப்புனாங்க ‘’ - இந்திய அணி தோல்வி குறித்து கே.எல்.ராகுல் குற்றச்சாட்டு
பாரதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததற்கு சில முக்கிய வீரர்கள் மீது கேப்டன் கே.எல்.ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 296 ரன்களை குவித்தது. இதனைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 265 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் கே.எல் ராகுல் தோல்வி குறித்து போட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த போட்டியின் மூலம் நாங்கள் அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்ளும், இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
துவக்கம் எங்களுக்கு மிக சிறப்பாக இருந்தது. ஆனால் மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. மிடில் ஓவர்களில் விக்கெட் விழுந்த தவறியதால் தென் ஆப்பிரிக்க அணி 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக எடுத்து விட்டது. இந்த இலக்கை எளிதாக எட்ட முடியும் என்று நினைத்தேன்.
கோலியும், தவானும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு உள்ளது என கூறினார். ஆனால் மிடில் ஆர்டரில் சொதப்பிவிட்டோம். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு, முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மிடில் ஆர்டரில் எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிக முக்கியமானது. எங்களால் முடிந்தவரை ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்காக போராடுவோம். அதற்காக தான் இங்கு வந்துள்ளோம்.
கடந்த வருடத்தில் நாங்கள் அதிகமான ஒருநாள் போட்டியை விளையாடவில்லை. அடுத்த உலக கோப்பை தொடரில் எங்களது கவனம் உள்ளது. அதற்கு முன்னதாக சிறந்த ஆடும் லெவனில் தயார்படுத்தி கொள்வோம் என தெரிவித்துள்ளார்.