டெல்லிக்கு ராஜாவாக மாறிய கொல்கத்தா - 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 41 வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணிமுதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் ஸ்டீவ் ஸ்மித், கேப்டன் ரிஷப் பண்ட் அதிகப்பட்சமாக 39 ரன்கள் விளாச கொல்கத்தா அணியின் அபார பந்துவீச்சால் மற்ற வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.
இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது.
அந்த அணியில் சுப்மன் கில் 30 ரன்களும், நிதிஷ் ராணா 36 ரன்களும் எடுக்க கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறது.