நடிகர்களின் முத்த காட்சியால் படம் பார்க்கும் பெண்கள் முகம் சுழிக்கின்றனர் - கே.ராஜன்!
சென்னை வடபழனியில் உள்ள பிரசாந்த் ஸ்டுடியோவில் திரைப்படம் ஒன்றின் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் பாரதிராஜா,கலைப்புலி தாணு,கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் ச்ச்ச்.. என்கிறார்கள்.
படத்தை பார்க்கும் தாய்மார்கள் முகம் சுழிக்க கூடாது என்றார்.இந்த விஷயத்தில் தமிழ் பண்பாடும்,கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.
மேலும் நடிகர்கள் டப்பிங் முடிவதற்குள் பணம் கேட்பதாக கூறினார். நடிகர்களின் முகம் வியாபாரம் ஆவதற்கு முன்பே பணம் கேட்டால் தயாரிப்பாளர் வட்டிக்கு வாங்கி பணம் கொடுப்பதாக கடுமையாக சாடினார்.
இதையடுத்து பாரதிராஜா பேசினார்.அப்போது கே.ராஜன் எங்க பிரச்சனைக்கு பதில் சொல்லுங்க என கூறவே,
பாரதிராஜா உங்க பிரச்சனை இப்போதைக்கு தீர்வது அல்ல.இருதரப்பினரிடையே சுமூகமாக பேசி தான் முடிவெடுக்க முடியும் என்றார்.