சினிமாவில் நடிக்க தயாரான மகள் - உதவி செய்ய போவதில்லை என நடிகை குஷ்பூ பிடிவாதம்..!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களான ரஜினி,கமல்,பிரபு ஆகியோருடன் ஜோடியாக நடித்தவர் நடிகை குஷ்பு.
நடிகை குஷ்பூ சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அண்மையில் தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
நடிகை குஷ்பூ இயக்குநரும்,நடிகருமான சுந்தர் சி - யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா,அனந்திதா என்று இரு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளான அவந்திகா லண்டன் சென்று தனது நடிப்பு பயிற்சியை முடித்துவிட்டு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் குஷ்பூ தனது ட்விட்டர் பதிவில், ‛‛என்னோட மூத்த மகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டார்.
அடுத்ததாக அவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கவுள்ளார். ஆனால், அவரை நாங்கள் அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவதில்லை. நீங்கள் அவரை வாழ்த்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
And BTW my elder one just finished her acting course with flying colors in one of the most prestigious acting school in London. Her struggle starts now as she wants to make it on her own. So no, we won't be launching her or recommending her anywhere. She needs your blessings ??
— KhushbuSundar (@khushsundar) May 27, 2022