P.E.T பீரியடில் பாடம் நடத்த விட மாட்டேன்; ஆசிரியர்களும் சீருடை அணிய வேண்டும் - பள்ளி மாணவி அனல் பறக்கும் பிரச்சாரம்!
பள்ளி தலைவருக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது மனைவி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பள்ளி மாணவி
கேரளா மாநிலம் மாணவி கன்னம்கோட் பகுதியில் உள்ள டிபிஜி மெமோரியல் யுபி என்ற பள்ளியில் மாணவி ஒருவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி தலைவருக்கான தேர்தலில் போட்டியிட அந்த மாணவி வேட்பாளராக தேர்வானார். அவருக்கு பேனா சின்னம் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் செயல் படுத்த திட்டமிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் மற்றும் திட்டங்கள் குறித்து அந்த மாணவி பிரச்சாரத்தின் போது மேடையில் அனல் பறக்க பேசினார். இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் அந்த மாணவியின் பெயர் தெரியாவிட்டாலும் 'புத்திசாலியான பிள்ளை என்றும் அரசியல் வாதிகளை மிஞ்சும் அளவிற்கு மாணவியின் பேச்சு உள்ளது என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரச்சாரம்
அந்த மாணவி பேசியதாவது'நான் இங்கு பள்ளித் தலைவியாக வந்தால், எல்லா ஒழுக்கத்தையும், விதிகளையும் கடைபிடிப்பேன், இங்குள்ள மாணவ மாணவிகளை மரியாதையுடன் நடந்துகொள்ள வைப்பேன். அவர்களையும் எல்லா ஒழுக்கங்களையும், விதிகளையும் கடை பிடிக்க வைப்பேன்.
ஏனெனில் நமது பள்ளியை சுத்தமாகவும்,ஒழுக்கத்துடனும் வைத்திருப்பது நமது கடமையாகும். அது மட்டுமல்லாமல் சில ஆசிரியர்கள் உடற்கல்வி வகுப்பில் பாடம் நடத்த வருகிறார்கள். அது முற்றிலும் தவறாகும், அது இங்கு நடக்காது. மேலும் எங்களது பிடி பீரியடில் எங்களுக்கு தேவையான கிரிக்கெட், புட்பால், மற்றும் ஷட்டில் ஆகியவற்றை வழங்க வேண்டியது பள்ளியின் பொறுப்பாகும்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் புதன் கிழமைகளில் பள்ளி மாணவர்களை மட்டும் அல்லாமல் ஆசிரியர்களும் சீருடை அணிய வேண்டும். ஏனெனில் சில பெண் ஆசிரியர்கள் பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தால் அதற்கு மேட்சிங்காக பச்சை செருப்பு, பச்சை க்யூடெக்ஸ், பச்சை கம்மல் மற்றும் பச்சை கிளிப் அணிகிறீர்கள். அதேபோல ஆண் ஆசிரியர்கள் பிராண்டட் ஷூ, பிராண்டட் ஜீன்ஸ் பேன்ட், பிராண்டட் சட்டை அணிகிறீர்கள், இது மாணவர்களை பாதிக்கிறது... என்று அந்த காணொளி முடிகிறது. இந்த வீடியோ இப்போது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.