கேரளா வெள்ளத்தில் சிக்கிய பேருந்து உயிர் பிழைத்த பயணிகள் - பதைபதைக்கும் காட்சிகள்

Kerala Heavy Rain Red Alert
By Thahir Oct 16, 2021 11:41 AM GMT
Report

கேரளாவில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.

பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் ஆலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் ஆறுகள் மற்றும் ஏரிகளுக்கு இடையில் பயணம் செய்யமால் பாதுகாப்பாக இருக்கவும் அரசு எச்சரித்துள்ளது.

கேரளா வெள்ளத்தில் சிக்கிய பேருந்து உயிர் பிழைத்த பயணிகள் - பதைபதைக்கும் காட்சிகள் | Kerala Red Alert Heavy Rain

இந்நிலையில் கோட்டயம் மாவட்டத்தின் பூன்ஜர் பகுதியில் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அதில் சிக்கிய பயணிகள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.