கேரளாவிலிருந்து மெக்காவிற்கு நடந்தே சென்ற வாலிபர் - 8,640 கி.மீ கடந்து சாதனை!

Kerala Mecca
By Vinothini Jun 11, 2023 05:53 AM GMT
Report

கேரளாவை சேர்ந்த இளைஞர் அங்கிருந்து மெக்காவிற்கு 8,640 கி.மீ கடந்து நடந்தே சென்று சாதனை படைத்துள்ளார்.

நடை பயணம்

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வளஞ்சேரியை சேர்ந்தவர் 29 வயதே ஆன ஷிஹாப் சோட்டூர். இவர் மெக்காவிற்க்கு நடந்தே ஹஜ் புனித பயணம் செல்ல முடிவு செய்தார்.

அதனால் கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி கேரளாவில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கினார். இவர் இந்தியாவிலிருந்து கிளம்பி சோட்டூர் பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் குவைத் ஆகிய நாடுகளைக் கடந்து இறுதியில் சவூதி அரேபியாவை சென்று அடைந்தார்.

இவர் கடந்த மாதம் சவூதி அரேபியாவை அடைந்து அங்கு உள்ள புனித தளமான மதீனாவிற்கு சென்றார்.

சாதனை

இதனை தொடர்ந்து, இவருக்கு சிறு வயதிலிருந்தே மெக்காவிற்கு நடந்தே செல்லவேண்டும் என்ற கனவு இருந்துள்ளது.

அதனால் இவர் மதீனாவை அடைந்ததும் மெக்காவிற்கு செல்ல 440 கி.மீ தூரம் இருந்த நிலையில், இவர் ஒரு நாளைக்கு 25 கி.மீ என்று கடந்து வெறும் 9 நாட்களில் மெக்காவை அடைந்துள்ளார்.

kerala-man-reached-mecca-by-walking-over-8640km

மேலும், இவர் அவர் 8,640 கி.மீ. தூரத்தை 370 நாட்களில் கடந்து தற்போது முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவை அடைந்தார். இவர் தன்னுடைய மெக்கா புனித பயணம் குறித்த வீடியோ பதிவுகளை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

இதனால் இவர் மெக்காவிற்கு நடந்தே சென்ற சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.