புதுமண ஜோடியின் தலையை முட்ட வைத்த நபர்; கதறி அழுத மணமகள் - கடைசியில் நேர்ந்த சோகம்!
புதுமண தம்பதியினரின் தலையை முட்ட வைத்த உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுமண ஜோடி
கேரளா, பாலக்காட்டை சேர்ந்தவர்கள் சச்சின் - சஜ்லா. இவர்களுக்கு அண்மையில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில், மணமகன் வீட்டிற்கு சென்றபோது, மணமகனின் உறவினர் மணமக்களின் தலையை வேகமாக முட்ட வைத்துள்ளார்.
அதில் வழிதாங்க முடியாத மணப்பெண் அழுதுக்கொண்டே மணமகன் வீட்டிற்குள் சென்றுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகியது.
வீடியோ வைரல்
அதில் மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து புகார் அளித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, பெண்மையை அவமதித்ததாகவும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொல்லை கொடுத்ததாகவும்
மணமகனின் உறவினர் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.