தொழிலதிபரிடம் ஆபாச படம் எடுத்து மிரட்டிய பிரபல இன்ஸ்டாகிராம் ஜோடி - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

Kerala
By Nandhini Sep 01, 2022 10:17 AM GMT
Report

கேரளாவில் தொழிலதிபரிடம் பிரபல இன்ஸ்டாகிராம் ஜோடி ஆபாச படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபருடன் பழக்கம் 

கேரள மாநிலம், திருச்சூர் அருகே கொடுங்கல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் திருமணமான தேவு என்ற பெண்ணிடம் நட்புடன் பழகி வந்துள்ளார். இவர்கள் நட்பாக பழகி வந்த நிலையில், இருவரும் நெருக்கம் ஏற்பட்டது. கணவர் துபாயில் வேலை பார்ப்பதாகவும், தனிமையில் உள்ளதால் ஆசை வார்த்தை கூறி தேவு வீட்டிற்கு அழைத்துள்ளார்.

தொழிலதிபரை தாக்கிய கும்பல்

இந்நிலையில், தேவு சொல்வதை நம்பி தொழிலதிபரும் பாலக்காட்டில் உள்ள அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் தனிமையில் இவர்கள் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிற்குள் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தொழிலதிபரை கடுமையாக தாக்கியது.

பின்பு, தொழிலதிபரை ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்தது. அந்த கும்பல், தொழிலதிபரி கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க செயின், செல்போன், ஏடிஎம் கார்டு, கார், பத்தாயிரம் பணம் மற்றும் காரில் இருந்த ஒரு சில ஆவணங்களையும் பறித்துக் கொண்டது.

ஆபாசமாக வீடியோ எடுத்த கும்பல்

மேலும், இன்னும் பணம் தராவிட்டால் உன் ஆபாச வீடியோவையும், படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தது. அப்போது, பயந்துபோன தொழிலதிபர் வீட்டிற்குச் சென்றால்தான் பணம் கொடுக்க முடியும் என்று கூற, அந்த கும்பல் அவரை காரில் ஏற்றி கொடுங்கல்லூருக்கு அழைத்து சென்றது. அப்போது, வழியில் கார் சென்றுக்கொண்டிருந்தபோது தொழிலதிபர் காரிலிருந்து குதித்து தப்பியுள்ளார்.

kerala - 6 people arrest

போலீசார் வழக்குப்பதிவு

இதனையடுத்து, பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று இது குறித்து புகார் கொடுத்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் கண்ணூர் கோகுல் தீப், அவரது மனைவி தேவு என்பது தெரியவந்தது.

சிறையில் அடைப்பு

இதனையடுத்து, இந்தக் கும்பல் இன்ஸ்டாவில் தன்னிடம் அறிமுகமாகும் நபர்களிடம் ஆசைவார்த்தை கூறி நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பின்பு, கண்ணூர் கோகுல் தீப், அவரது மனைவி தேவு, சரத் (24), அஜித் (20) வினய் ( 24) ஜிஸ்னு (20) ஆகிய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.