கேரளாவில் பதறாமல் பாம்பை பிடித்த பெண் வன அதிகாரி - வைரலாகும் வீடியோ
குடியிருப்பு பகுதியில் புகுந்த நல்ல பாம்பு ஒன்றை பெண் வன அதிகாரி ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கட்டக்கடா குடியிருப்பு பகுதிக்குள் நல்லப்பாம்பு ஒன்று புகுந்தது.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து குடியிருப்பு பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரி ஜி.எஸ்.ரோஷினி பாம்பை பிடிக்க களத்தில் இறங்கினார்.
அப்போது நல்லப்பாம்பு சீறிப்பாய்ந்து வன அதிகாரியை ரோஷினியை தீண்ட முயன்றது.ஆனால் ரோஷினி பதற்றம் இல்லாமல் பாம்பை லாவகமாக பிடித்து பையில் போட்டு கட்டினார்.
பாம்பு பிடிப்பதை பதற்றத்துடன் பார்த்த குடியிருப்பு வாசிகள் ரோஷினியை வெகுவாக பாராட்டினர். ரோஷினி திருவனந்தபுரம் மாவட்டத்தின் பயிற்சி பெற்ற வனக்காப்பாளர் ஆவார்.
இவர் பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவர். ரோஷினி பாம்பு பிடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
A brave Forest staff Roshini rescues a snake from the human habitations at Kattakada. She is trained in handling snakes.
— Sudha Ramen ?? (@SudhaRamenIFS) February 3, 2022
Women force in Forest depts across the country is growing up in good numbers. VC @jishasurya pic.twitter.com/TlH9oI2KrH

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

இலங்கையால் சமாளிக்கவே முடியாத ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி: சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய மைத்திரி! IBC Tamil
