இது தான் கல்யாண சாவா ? இறந்த மூதாட்டி உடலோடு சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்த உறவினர்கள்
கேரளாவில் இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட பெட்டியுடன் சிரித்த முகமாய் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்ததுள்ளது இணையத்தில் வைரலாகிவருகிறது.
மரணமடைந்த வீட்டில் போட்டோ ஷூட்
கேரளா பத்தனம்திட்டா மல்லப்பள்ளியைச் சேர்ந்தது பனவெலில் குடும்பம். அந்த குடும்பத்தின் 95 வயது மூதாட்டி மரியம்மா வர்கீஸ் கடந்த வாரம் இறந்துபோனார். இவரது கணவரான கிறிஸ்தவ மதபோதகர் வர்கீஸ் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார்.
இவர்களுக்கு 9 குழந்தைகள், 19 பேரக்குழந்தைகள். அனைவரும் உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கிறார்கள். ஆனால் 4 தலைமுறைகளைச் சேர்ந்த அவர்களில் பலர், மூதாட்டி இறக்கும் சமயத்தில் வந்துவிட்டார்கள்.
மூதாட்டி இறந்ததும் அவர்களின் மத வழக்கப்படி முறையாக இறுதிச்சடங்கு செய்தவர்கள், அதற்கு முன் அவரது உடல் வைக்கப்பட்ட கண்ணாடி பெட்டியுடன் சிரித்த முகத்தோடு குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்கள்.
வைரலாகும் புகைப்படம்
இந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகிவருகிறது , இறந்த வீட்டில் இப்படியா சிரிச்சிக்கிட்டு போஸ் கொடுப்பாங்க?' என்று சிலர் கடுகடுக்க வேறு சிலரோ, 'துக்க வீடு என்றாலே சோகமாகவே இருக்கவேண்டுமா என்ன ? என்று ஆதராகவும் தங்கள் கருத்தினை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த புகைப்படம் குறித்து இறந்துபோன மூதாட்டியின் மகன் ஜார்ஜ் உம்மனோ (68), கூறுகையில் : மற்றவர்களின் கருத்து பற்றி எங்களுக்கு கவலையில்லை.
நிறைவான வாழ்வை வாழ்ந்து முடித்த எங்கள் தாயின் மரணத்தின்போது குடும்பத்தினர் அனைவரும் இயல்பான உணர்வை வெளிப்படுத்தினோம். பி ன்னர், அவருடனான சிரிப்பும், நெகிழ்வுமான தருணங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்துகொண்டோம்.
அப்போது எடுத்த ஒரு படம்தான் இது. 10 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தந்தை இறந்தபோதும் இப்படித்தான் மகிழ்வாக இறுதி விடை கொடுத்தோம் எனக் கூறியுள்ளார்.
தற்போது சிரித்தமுகாமாய் இறந்துபோன மூதாட்டியின் உடல் வைக்கப்பட்ட இடத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த குடும்பத்தினரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.