Friday, Jun 27, 2025

சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை : வரிசையில் காத்துநின்ற வாகனங்கள்

Viral Video Elephant
By Irumporai 3 years ago
Report

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மரையூர் அருகே உள்ள சாலையில் யானை ஒன்று குட்டி ஈன்றுள்ளது. கருவுற்ற யானை ஒன்று பிரசவ வலியில் மரையூர் சாலையில் பிளிறியப்படி வந்துள்ளது.

பிரசவலியில் துடித்த யானை

அதனை கண்ட வாகன ஓட்டிகள் தொலைதூரத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு அமைதி காத்துள்ளனர். யானையும் 1 மணி நேரமாக பிரசவ வலியில் பிளிறியப்படி இருந்துள்ளது. பின்னர் சாலைக்கு நடுவே யானை குட்டியையும் ஈன்றுள்ளது.

காத்து நின்ற வாகனங்கள்

பிறகு குட்டியை தழுவிக்கொண்டு அதனை எழுந்து நிற்க வைத்து பின்னர் காட்டுக்குள் திரும்பி சென்றுள்ளது.

சுமார் 1 மணி நேரமாக நடைபெற்ற யானையின் சத்தம் நடுவே எந்த வாகனத்தின் சத்தமும் கேட்கவில்லை. அவ்வளவு நேரமும் வாகனங்கள் வரிசையாக யானைக்காக காத்துக்கொண்டு சத்தம் எழுப்பாமல் இருந்துள்ள மனிதநேய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.