PFI அமைப்பினர் பந்த்: ஹெல்மெட் அணிந்த பேருந்து ஓட்டுநர்கள் : கேரளாவில் பதற்றம்

Viral Video Kerala
By Irumporai Sep 23, 2022 05:51 AM GMT
Report

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது நடத்தப்பட்ட சோதனைக்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PFI அமைப்பினர் பந்த்

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கேரளாவில் கலவரம்  

கேரளாவில் பந்த்தை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள அரசுப்பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

PFI அமைப்பினர் பந்த்: ஹெல்மெட் அணிந்த பேருந்து ஓட்டுநர்கள் : கேரளாவில் பதற்றம் | Kerala Bandh Nia Against Pfi Raid

இதன்காரணமாக ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இந்த நிலையில்,இதனையடுத்து கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து, வழக்கமாக கேரளாவுக்கு இயக்கப்படும் 30க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதே போல கேரளாவில் இருந்து கோவைக்கு பெரும்பாலான கேரள மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.