கேரளாவில் கனமழையால் மூழ்கிய ஆலுவா சிவன் கோவில் - வைரலாகும் வீடியோ

Kerala
By Nandhini Aug 02, 2022 08:23 AM GMT
Report

கனமழைக்கு 10 பேர் பலி

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மழை வெள்ளத்தில் அடித்துச் சென்ற சிலரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பல ஓடைகள் நிரம்பி வழிகிறது.

ரெட் அலார்ட்

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், மேலும் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுத்துள்ளது.   

கனமழையில் மூழ்கிய ஆலுவா சிவன் கோவில்

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், கனமழை காரணமாக எர்ணாகுளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆலுவா சிவன் கோவில் முழுவதும் நீரில் மூழ்கியது.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

kerala-aluva-shiva-temple