மோடி இதை செய்தால் பாஜக பிரசாரம் செய்கிறேன் - கெஜ்ரிவால்
டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்தைப் பெறுவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் பேசியுள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் உள்ள சத்ரசல் ஸ்டேடியத்தில் 'ஜந்தா கி அதாலத்' என்ற பொதுக்கூட்டத்தில் டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், "பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இரட்டை இன்ஜின் அரசுகள் தோல்வியடைந்து வருகின்றன. இரட்டை இன்ஜின் என்பது இரட்டை கொள்ளை மற்றும் இரட்டை ஊழலாக மாறிவிட்டது.
பாஜகவிற்கு பிரச்சாரம்
டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. சிறையில் எனது இன்சுலின் சப்ளை நிறுத்தப்பட்டது. என் சிறுநீரகம் செயலிழந்திருக்கலாம், நான் இறந்திருக்கலாம்.
துணை ஆளுனரிடமிருந்து டெல்லியை விடுவித்து முழு மாநில அந்தஸ்தைப் பெறுவோம்” டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.க. ஆட்சி செய்யும் 22 மாநிலங்களில் பிரதமர் மோடி இலவச மின்சாரம் வழங்கினால் நான் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தயார்" என்று பேசினார்.