ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் .. இது 130 கோடிப் பேரின் விருப்பம் : மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்
புதிய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
ரூபாய் நோட்டுகளில் தெய்வ உருவங்கள்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படத்தை வைத்துவிட்டு, மறுபுறம் லட்சுமி தேவி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும் எனவும் புதிய ரூபாய் நோட்டுகளில் இரு தெய்வங்களின் உருவங்கள் இருப்பது நாடு செழிக்க உதவும் எனக் கூறினார்.
கெஜ்ரிவாலின் இத்தகைய கருத்து இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது, இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படத்தை வைத்துவிட்டு, மறுபுறம் லட்சுமி தேவி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும் என 130 கோடி இந்தியர்களின் சார்பில் நான் இதை எழுதியிருக்கிறேன்.
பிரதமர் மோடிக்கு கடிதம்
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனபோதிலும், இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மேலும், இந்தியா இன்னும் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது.
ஒருபுறம், நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும், மறுபுறம், நமது முயற்சிகள் பலனளிக்க இறைவனின் ஆசீர்வாதமும் தேவை. சரியான கொள்கை, கடின உழைப்பு மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் இவற்றின் மூலம் மட்டுமே நாடு முன்னேறும் என வலியுறுத்தியிருந்தேன்.
मैंने प्रधानमंत्री जी को पत्र लिखकर 130 करोड़ भारतवासियों की ओर से निवेदन किया है कि भारतीय करेंसी पर महात्मा गांधी जी के साथ-साथ लक्ष्मी गणेश जी की तस्वीर भी लगाई जाए। pic.twitter.com/OFQPIbNhfu
— Arvind Kejriwal (@ArvindKejriwal) October 28, 2022
தற்போது, இந்த விவகாரத்தில் மக்களிடத்தில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது.
மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டிருக்கிறது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்' என கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.