ரஜினிக்காக இரண்டு முக்கிய படங்களில் நடிக்க ‘நோ’ சொன்ன பிரபல முன்னனி நடிகை : இதுதான் காரணமா?

keerthy suresh ponniyin selvan annaththe opportunity missed
By Swetha Subash Jan 31, 2022 10:32 AM GMT
Report

ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக மணிரத்னத்தின் படத்தில் நடிக்க நோ சொல்லி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த தீபாவளிக்கு அன்று ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளியானது.

படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

குடும்பங்கள் விரும்பும் படமாக வெளியான அண்ணாத்த மக்கள் மத்தியில் கலவையான விமர்சனக்களை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

போட்ட பணத்தை விட அதிக லாபத்தை படம் ஈட்டியதாக தயாரிப்பாளர் தரப்பும் கூறியது.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக இரு படங்களை கீர்த்தி சுரேஷ் வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். அதில் ஒரு திரைப்படம் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்.

இந்தப் படத்தில் பிரதான கதாபாத்திரமான குந்தவை தேவியாக நடிக்க மணிரத்னம் முதலில் கீர்த்தி சுரேஷைதான் அணுகியுள்ளார்.

ஆனால் ரஜினி படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக பொன்னியின் செல்வன் பட வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் நிராகரித்துள்ளார். பிறகு அந்த வேடத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதேபோல் நானி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஷியாம் சிங்கா ராய் திரைப்படத்தில் சாய்பல்லவி நடித்திருக்கும் வேடத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷை அணுகியுள்ளனர்.

அண்ணாத்த படத்திற்காக அதையும் நிராகரித்திருக்கிறார் கீர்த்தி.

இந்நிலையில் அண்ணாத்த படத்திற்காக இவ்விரண்டு படங்களையும் தான் தவிர்த்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.