‘’ நீங்க மீடியா கொஞ்சம் அமைதியா இருங்க , அவர பத்தி எனக்கு தெரியும் ’’ : கோலி குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா பதில்
ஊடகங்கள் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தால் போதும் விராட் கோலி குறித்த கேள்விக்கு ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரோகித்ஷர்மாவிடம் விராட் கோலியின் பேட்டிங் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் கூறிய விராட் கோலியின் பேட்டிங் ‘பார்ம்’ குறித்து கவலையில்லை என கூறினார். மேலும்,,நீங்கள் ஊடகங்கள் கொஞ்ச நாட்கள் அமைதியாக இருங்கள்
கோலி மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்புவார் என்று கூறினார் . மேலும் தற்போது இந்த செய்தி குறித்து நீங்கள் (ஊடகங்கள்) அதிகமான கருத்துக்களை தர வேண்டாம் , மேலும் எனக்கு கோலியினை எனக்கு தெரியும் நான் கவனித்தவரையில், அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார் என கூறினார்.