"பொண்ணா நீ"..! திடீரென வழிமறித்த நான்கு பேர் ..! செய்வதறியாது தவித்து போன காவ்யா அறிவுமணி

Tamil Actress Actress
By Karthick Feb 07, 2024 09:08 AM GMT
Report

சின்னத்திரையில் இருந்து தற்போது திரைத்துறையில் கால்பதித்துள்ளார் காவ்யா அறிவுமணி.

காவ்யா

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலமடைந்தார் காவ்யா. இவரின் உண்மையான பெயர் தெரியாத பலரும் கூட இவரை முல்லை என்ற கதாபாத்திரத்தின் பெயர் வழியாகவே தற்போதும் அழைக்கின்றனர்.

kavya-arivumani-shares-her-experience-caught

சின்னத்திரையில் இருந்து தற்போது சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கும் காவ்யா, பெரும் நாயகியாக வளரவேண்டும் என மும்முரம் காட்டி வருகின்றார். பேட்டி ஒன்றில் தான் 4 பேரிடம் மாட்டிக்கொண்டு தவித்த சம்பவம் ஒன்றை குறித்து அவர் பேசியுள்ளார்.

உயிரிழந்த சித்ரா இடத்தில் 'முல்லை' காவ்யா அறிவுமணி -  பெருகும் ஆதரவு..!

உயிரிழந்த சித்ரா இடத்தில் 'முல்லை' காவ்யா அறிவுமணி - பெருகும் ஆதரவு..!

நான்கு பேர்

அந்த பேட்டியில், தான் ஒரு முறை வேகமாக கார் ஓட்டி சென்ற நிலையில், சட்டென போலீசார் இவரின் வாகனத்தை வழிமறித்துள்ளனர். கண்ணாடியை இறக்கிய பிறகு, தன்னை யார் என அவர்கள் கண்டு கொண்ட பிறகு, ஒரு பெண்ணா இவ்வளவு வேகமாக கார் ஓட்டியது என்றும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

kavya-arivumani-shares-her-experience-caught

பின்னர் அவர்களிடம் தான் இது போன்று மீண்டும் செய்ய மாட்டேன் என கேட்டுக்கொள்ள ஒரு முறை வார்னிங்குடன் தப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.