துப்பாக்கியால் சுட்டு இளம் பிரபலம் தற்கொலை : பஞ்சாப்பில் அதிர்ச்சி

punjab kaur chandh 17 yrs old dies of suicide police enquires
By Swetha Subash Dec 11, 2021 06:52 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது பிரபல துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கவுர் சந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேசிய அளவில் பதக்கம் வென்ற இவர், சமீபத்தில் முடிவடைந்த 64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்றதால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் துப்பாக்கியால் சுட்டு அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் கவுர் சந்த்.

போட்டியில் தோற்றதால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் தற்கொலைக்கு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.