சனாதன விவகாரம்...உங்க அம்மா'க்கே டெங்கு, மலேரியா வந்துருக்கே..!! உதயநிதியை சீண்டும் கஸ்தூரி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்தான பேச்சு பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதில் தற்போது நடிகை கஸ்தூரியும் கருத்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி பேச்சு
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்திற்கு பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், அதற்கு உதயநிதியும் தனது பதிலை அளித்து வருகிறார். நேற்று இது குறித்து உதயநிதி வெளியிட்ட டீவீட்டில், தான் சனாதன தர்மத்தை மட்டுமே எதிர்த்து பேசியதாகவும், அதனை பின்பற்றுபவரை குறித்து எந்த தவறான கருத்துக்களை தெரிவிக்கவில்லை என சுட்டிக்காட்டி இருந்தார்.
கஸ்தூரி விமர்சனம்
இந்த விவகாரம் குறித்து நடிகையும், அதிமுக ஆதரவாளருமான கஸ்தூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே என குறிப்பிட்டு, அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்? என வினவி இருக்கிறார்.
ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி என குற்றம்சாட்டி இருக்கும் கஸ்தூரி, அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? என்றும் முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க"என விமர்சித்துள்ளார்.
டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே...அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?
— Kasturi (@KasthuriShankar) September 3, 2023
ஊருக்கு உபதேசம் அதுவே திராவிடிய பரம்பரை யுக்தி.
அவ்வளவு சனாதனத்தின் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ ? முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க !