தனுஷுக்கு அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சனை - செக் வைக்கும் திரை பிரபலம்!
நடிகர் தனுஷுக்கு அடுத்தடுத்து ஏற்படும் பிரச்சனைகளால் அவர் கலக்கம் அடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் 18 திருமணம் ஆகி 18 ஆண்டுகளுக்கு பிறகு பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் அறிவிப்பு திரைவட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து தன் மகளை வேண்டாம் என்று சொன்ன தனுஷை பழிவாங்க ஐஸ்வர்யா அம்மா லதா ரஜினிகாந்த் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார்.
அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க கூடாது என தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் சொல்லி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது நடிகர் தனுஷுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில்,தற்போது மீண்டும் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
அண்மையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாறன். இந்த திரைப்படம் OTT-யில் வெளியாகியது,எதிர்பார்த்த வெற்றி பெறாததால் திரை குழுவினர் மற்றும் தனுஷ் வருந்தினர்.
இந்நிலையில் படம் வெளியான அடுத்த நாளே கார்த்திக் நரேன் ஒரு சர்ச்சையான பதிவு ஒன்றை போட்டிருந்தார். அந்த பதிவில் விரைவில் உண்மையை சொல்லப்போவதாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே கார்த்திக் நரேனுக்கும்,நடிகர் தனுஷுக்கும் இடையே படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களிலே மோதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கி வரும் நிறங்கள் மூன்று திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடனான மோதல் குறித்து படத்தில் சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிப்படையாக சொல்லாமல் படத்தின் மூலம் கார்த்திக் நரேன் சொல்லியிருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.