விசா முறைகேடு வழக்கு கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது - சிபிஐ அதிரடி..!
விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் கணக்கு தணிக்கையாளர் பாஸ்கர ராமனை கைது செய்தனர் சிபிஐ அதிகாரிகள்.
சீனா நாட்டு பிரஜைகளுக்கு விசா வழக்குவதில் நடைபெற்ற விவகாரத்திலே ஆடிட்டர் பாஸ்கர ராமன் முக்கிய குற்றவாளி என்று சிபிஐ நேற்று தெரிவித்து இருந்தது.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள உள்ள மின் நிலையத்தில் பயணியாற்ற சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு நேற்று நாடு முழுவதும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.
விசா பெறுவதற்காக கார்த்தி சிதம்பரத்தின் மூலமாக தான் லஞ்சம் கொடுக்கபட்டது என்பது சிபிஐ தரப்பில் வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டாக உள்ளது.