தொட்டியில் தண்ணீர் குடித்த தலித்பெண் - கோமியத்தால் சுத்தம் செய்த கிராம மக்கள்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Karnataka
By Nandhini Nov 21, 2022 11:41 AM GMT
Report

தலித்பெண் ஒருவர் தொட்டியில் தண்ணீர் குடித்ததால் கிராம மக்கள் கோமியத்தால் சுத்தம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோமியத்தால் சுத்தம் செய்த கிராம மக்கள்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், கர்நாடாகா, சாம்ராஜ்நகர் ஹெக்கோதரா தாலுகாவில் உள்ள தண்ணீர் தொட்டியில் தலித் பெண் ஒருவர் தண்ணீர் குடித்ததை அடுத்து, மேல்சாதி கிராம மக்கள் மினி டேங்கிலிருந்து குடிநீரை வெளியேற்றி, கோமியத்தால் சுத்தம் செய்தனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இச்செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.   

karnataka-viral-video