இனி ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதில் பணம் - அசத்தல் அறிவிப்பு!

Karnataka
By Sumathi Jun 29, 2023 05:25 AM GMT
Report

5 கிலோ இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இலவச அரிசி

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 5 உத்தரவாதங்களில் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 2.28 லட்சம் மெட்ரிக் டன் அரிசி மத்திய அரசிடம் இருந்து வாக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் ஒப்பந்த புள்ளிகள் கோர மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இனி ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதில் பணம் - அசத்தல் அறிவிப்பு! | Karnataka Transfer Cash Instead Of 5 Kg Rice

மேலும் அதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா, அன்ன பாக்யா திட்டத்தை ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த அரசு உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இனி பணம்

எனவே, இந்தத் திட்டத்தில் தற்போது, ரேஷன் அரிசிக்கு பதிலாக பணம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது ஒரு கிலோ அரிசிக்கு ரூ.34 வீதம் 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.680 டெபாசிட் செய்யப்படும்.

இனி ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதில் பணம் - அசத்தல் அறிவிப்பு! | Karnataka Transfer Cash Instead Of 5 Kg Rice

முன்னதாக, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, ஜூன் 13 அன்று இந்திய உணவுக் கழகம் (FCI) மாநிலங்களுக்கு அரிசி மற்றும் கோதுமை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.