ஹிஜாப் விவகாரம்: நீதிபதிகளுக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பு – முதல்வர் அறிவிப்பு
ஹிஜாப் விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் வந்ததால் அவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்: “ஹிஜாப் தீர்ப்பு வழங்கிய மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளோம்.நீதிபதிகள் உயிருக்கு மிரட்டல் விடுத்ததாக விதானசவுதா காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை முழுமையாக விசாரிக்க இயக்குநர் ஜெனரல் மற்றும் ஐஜிக்கு உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறினார்.
Karnataka govt to provide 'Y' category security to judges who delivered hijab verdict
— ANI Digital (@ani_digital) March 20, 2022
Read @ANI Story | https://t.co/jW183Dg1YW#HijabVerdict #KarnatakaHC pic.twitter.com/mqbNwFdbCC
மூன்று நீதிபதிகளில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தியும் அடங்குவர். தலைமை நீதிபதியைத் தவிர,நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித் மற்றும் காசி எம் ஜெய்புன்னிசா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.