கர்நாடகாவில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு
கர்நாடகாவில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஊக்கப்படுத்த அமைச்சர்கள் நேரில் சென்று பள்ளிகளை பார்வையிட வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கவும், கொரோனா விதிகளை பின்பற்றவும் பெற்றோர் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ಮಕ್ಕಳ ಸುರಕ್ಷತೆಯ ಜೊತೆಗೆ ಅವರ ಶೈಕ್ಷಣಿಕ ಭವಿಷ್ಯದ ಹಿತಾಸಕ್ತಿಗಳನ್ನೂ ಪರಿಗಣಿಸಿ, ತಜ್ಞರ ಸಲಹೆಗಳಿಗೆ ಅನುಗುಣವಾಗಿ, ಸರ್ಕಾರ ತೀರ್ಮಾನ ತೆಗೆದುಕೊಂಡಿದೆ. ಈ ಸಂದರ್ಭದಲ್ಲಿ ಮಕ್ಕಳು ಹಾಗೂ ಪೋಷಕರು, ಮಾರ್ಗಸೂಚಿ ನಿಯಮಗಳನ್ನು ಪಾಲಿಸಿ, ಸುರಕ್ಷತಾ ಕ್ರಮಗಳನ್ನು ಅನುಸರಿಸಿ, ಯಾವುದೇ ಆತಂಕವಿಲ್ಲದೆ ಸರ್ಕಾರದೊಂದಿಗೆ ಸಹಕರಿಸಲು ಕೋರುತ್ತೇನೆ. (2/2)
— CM of Karnataka (@CMofKarnataka) August 22, 2021