5 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த கடைக்காரர்- பெற்ற தாயே துணை போன கேவலம்
கர்நாடகாவின் மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
அங்கு 2 சகோதரிகள் ஒரு கடைக்காரர் தங்கள் மைனர் மகள்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோக்களை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. பெருமாள் என்பவருக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அப்போது அந்த கடையை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அக்கடையில், ஒரு நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளின் வீடியோக்கள் கண்டெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பெருமாளை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் கிளப்களில் சுற்றி திரிபவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரது 2 சகோதரிகளும் இதற்கு உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சகோதரிகள் பெருமாளுடன் உறவில் இருப்பது போதாது என்று, அவர்களது மகள்களை வன்கொடுமை செய்ய அனுமதித்தனர்.
விளையாடுவதற்காக வீட்டிற்கு வந்த குழந்தைகளை மூன்று நபர்கள் சேர்ந்து பல முறை வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருப்பு நிற புடவையில் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட அசத்தல் புகைப்படங்கள்.. குவியும் லைக்குகள் Manithan
Super Singer Junior: பார்வையற்ற சிறுவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்... இசையமைப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன? Manithan