மதுபானங்கள் விலை உயர்வு - பாட்டிலுக்கு இவ்வளவா?
3-வது முறையாக மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளது.
மதுபான விலை உயர்வு
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியது.
இதில், 2 முறை மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 3-வது முறையாக மதுபானம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பீர் விலை பாட்டிலுக்கு ரூ.10 அதிகரிக்கப்பட்ட நிலையில்,
மதுப்பிரியர்கள் அதிர்ச்சி
இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவார்ட்டர் பாட்டில் விலை ரூ.25 வரையிலும், ஒரு புல் பாட்டில் விலை ரூ.100 வரையும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வால் கலால்துறைக்கு கூடுதலாக ரூ.1,400 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . இதற்கான உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில் நடப்பு ஆண்டில் கலால் வரி வருவாய் இலக்கு ரூ.40 ஆயிரம் கோடியாக அரசு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.