மதுபானங்கள் விலை உயர்வு - பாட்டிலுக்கு இவ்வளவா?

Indian National Congress Karnataka TASMAC
By Sumathi May 16, 2025 07:18 AM GMT
Report

3-வது முறையாக மதுபானங்கள் விலை உயர்ந்துள்ளது.

மதுபான விலை உயர்வு

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை படிப்படியாக அமல்படுத்தியது.

liquor price hike

இதில், 2 முறை மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 3-வது முறையாக மதுபானம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பீர் விலை பாட்டிலுக்கு ரூ.10 அதிகரிக்கப்பட்ட நிலையில்,

ஓடும் அரசு பேருந்தில் டிரைவர் செய்த செயல் - கதறிய பயணிகள்

ஓடும் அரசு பேருந்தில் டிரைவர் செய்த செயல் - கதறிய பயணிகள்

மதுப்பிரியர்கள் அதிர்ச்சி

இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு குவார்ட்டர் பாட்டில் விலை ரூ.25 வரையிலும், ஒரு புல் பாட்டில் விலை ரூ.100 வரையும் உயர்ந்துள்ளது.

மதுபானங்கள் விலை உயர்வு - பாட்டிலுக்கு இவ்வளவா? | Karnataka Liquor Price Hike Details

இந்த விலை உயர்வால் கலால்துறைக்கு கூடுதலாக ரூ.1,400 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . இதற்கான உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில் நடப்பு ஆண்டில் கலால் வரி வருவாய் இலக்கு ரூ.40 ஆயிரம் கோடியாக அரசு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.