சம்பளமே வெறும் ரூ.15,000தான்; ரெய்டில் சிக்கிய 24 வீடுகள், ரூ.30 கோடி - பலே எழுத்தர்!

Karnataka Crime
By Sumathi Aug 02, 2025 06:36 AM GMT
Report

முன்னாள் எழுத்தரிடமிருந்து ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சொத்​து குவிப்பு

கர்நாடகா, கொப்பலில் ஊரக மேம்​பாட்டு வாரி​யத்​தில் எழுத்​த​ராக பணி​யாற்​றிய காளகப்பா நித‌குன்ட்டி வரு​மானத்​துக்கு அதி​க​மாக சொத்து குவித்​த​தாக லோக் ஆயுக்தா போலீ​ஸாருக்கு புகார் வந்​தது.

காளகப்பா நித‌குன்ட்டி

இதனையடுத்து அதிகாரிகள் அவரது வீடு, அலு​வல​கம், அவரது சகோ​தரர் ஜெகன் குன்ட்டி​யின் வீடு ஆகிய​வற்​றில் சோதனை நடத்​தினர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நட‌ந்த இந்த சோதனை​யில் 30 போலீ​ஸார் ஈடு​பட்​ட‌னர்.

அப்​போது காளகப்பா வீட்​டில் கணக்​கில் வராத 24 வீடு​களின் ஆவணங்​கள், 4 காலி வீட்டு மனை​களின் ஆவணங்​கள், 40.8 ஏக்​கர் விவ​சாய நிலத்​தின் ஆவணம் ஆகியவை சிக்​கின. இந்த சொத்​துகள் காளகப்​பா, அவரது மனைவி மற்​றும் அவரது சகோ​தரரின் பெயரில் பதிவு செய்​யப்​பட்​டிருந்​தன.

100க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு; வன்கொடுமை, ஆசிட் தழும்பு - 13 இடங்களில் தோண்டும் பணி!

100க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு; வன்கொடுமை, ஆசிட் தழும்பு - 13 இடங்களில் தோண்டும் பணி!

சிக்கிய எழுத்தர்

தொடர்ந்து அவரது வீட்​டில் இருந்து ரகசிய பீரோ​வில் சோதனை நடத்​தி​ய​தில் ரூ.14 லட்சம் ரொக்கம், 350 கிராம் தங்க நகைகளும், 1.5 கிலோ எடை​யுள்ள வெள்​ளிப் பொருட்​களும் சிக்​கின. மேலும் 16 விலை உயர்ந்த கைக் கடி​காரங்​கள், 2 கார்​கள், 2 இரு சக்கர வாக​னங்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

சம்பளமே வெறும் ரூ.15,000தான்; ரெய்டில் சிக்கிய 24 வீடுகள், ரூ.30 கோடி - பலே எழுத்தர்! | Karnataka Former Clerk Raid 30 Crore Assets Found

மேலும், முன்​னாள் அரசு பொறி​யாளர் சின்​சோல்​கருடன் இணைந்து 96 முழு​மையடை​யாத திட்​டங்​களுக்கு போலி ஆவணங்​களை தயாரித்து ரூ.72 கோடிக்​கும் அதி​க​மாக மோசடி செய்​ததற்​காக ஆதா​ரங்​களும் கிடைத்துள்ளது.

தற்போது இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் வங்கி விவரங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.