கர்நாடகவில் பரபரப்பு : மீண்டும் ஹிஜாப் அகற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்

karnataka hijab studentprotest
By Irumporai Feb 16, 2022 09:17 AM GMT
Report

கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு வந்த இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாபை அகற்ற மறுத்து போராட்டத்தில்  இறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் ஆதரவாகவும் போராட்டங்கள் வெடித்த காரணாத்தால் பள்ளை கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது 

தற்போது பள்ளி ,கல்லூரிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில்  தும்கூர், விஜயபுரா, உடுப்பி உள்ளிட்ட இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து கொண்டு இஸ்லாமிய மாணவிகள் வருகை தந்தனர்.

கர்நாடகவில் பரபரப்பு : மீண்டும் ஹிஜாப் அகற்ற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் | Karnataka College As Hijab Clad Women Denied Entry

பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியும் ஹிஜாபை அகற்ற மறுத்த அவர்கள், போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயபுராவில் கல்லூரி ஒன்றில் ஹிஜாபுடன் வகுப்புக்கு சென்று அமர்ந்து கொண்ட மாணவிகள் கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால் பல இடங்களில் இஸ்லாமிய மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லவில்லை. போராட்டங்களை தடுக்க கர்நாடகாவில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.